மெட்ரிக் பள்ளிகளை மூட இன்றுடன் கெடு முடிகிறது!
சென்னை:
தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத 4000க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகளை மூட அரசு விதித்திருந்த கெடுதிங்கள்கிழமையுடன் முடிந்தது. இருப்பினும் அரசின் கெடுவையும் மீறி பள்ளிகளைத் திறக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் முடிவுசெய்துள்ளன.
இந்த நிலையில் கடந்த 11ம் தேதி அங்கீகாரம் பெறாத மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அரசு அனுப்பிய ஒரு கடிதத்தில் 31ம்தேதிக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து 400க்கம் மேற்பட்ட பள்ளிகளின்நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளன.
அதில், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த மேலும் 1 ஆண்டு அவகாசம் கேட்டும், அரசின்உத்தரவுக்கு இடைக்காலத் தடை கோரியும் அவை கோரிக்கை விடுத்துள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்றுஉயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் அரசின் தடையையும் மீறி 1ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்கப் போவதாக தமிழ் மற்றும் ஆங்கிலப் பள்ளிகள்சங்கம் அறிவித்துள்ளது.