மழை எதிரொலி: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது.
தென் மேற்குப் பருவ மழை தமிழகத்தின் சில பகுதிகளில், வானிலை ஆய்வு நிலையத்தின் கணிப்புக்கு மாறாக முன் கூட்டியேதொடங்கியுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்லமழை பெய்து வருகிறது.
அணைக்கு தற்போது விநாடிக்கு 1500 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 52.10 அதாவது 19.16டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து விநாடிக்கு 889 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
மழை தொடர்ந்து நீடித்தால் அணைக்கு வரும் நீர் அளவு கணிசமாக உயரும், அதன் மூலம் காவிரிப் பாசனப் பகுதிகளுக்கு நீர்திறப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
வழக்கமாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் அணையில் நீர் இருப்பு வெகு குறைவாக இருப்பதால் இந்தஆண்டு திட்டமிட்டபடி அணையைத் திறக்க முடியுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications