For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஞ்சி திரும்ப சங்கராச்சாரியார்கள் முடிவு

By Staff
Google Oneindia Tamil News

கலவை:

சங்கரராமன் கொலை வழக்கைத் தொடர்ந்து காஞ்சி சங்கர மடத்தில் தங்காமல் கலவை மடத்தில் தங்கியிருக்கும் ஜெயேந்திரரும்,விஜயேந்திரரும் மீண்டும் காஞ்சிபுரம் திரும்ப முடிவு செய்துள்ளனர்.

சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி, ஜாமீனில் விடுதலையான பின்னர் கலவை மடத்திற்கு சென்று தங்கினார் ஜெயேந்திரர்.ஜாமீனுக்குப் பிறகு சிறிது காலம் சென்னையில் தங்கியிருந்த விஜயேந்திரரும் பின்னர் கலவைக்கு சென்று தங்கினார்.

அங்கிருந்தபடியே பூஜைகளை நடத்தியும், பக்தர்களை சந்தித்தும் வரும் இரு சங்கராச்சாரியார்களும், மீண்டும் காஞ்சிபுரம்திரும்ப முடிவு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு இரு சங்கராச்சாரியார்களும் காஞ்சிபுரம் திரும்பவுள்ளனர்.

இருவரும் மீண்டும் வருவதையொட்டி காஞ்சி சங்கர மடத்தில் ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன. அறைகளைதூய்மைப்படுத்தும் வேலைகளும் வேறு சில வேலைகளும் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் இருவரும் காஞ்சிபுரம்திரும்புவார்கள் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X