காஞ்சி திரும்ப சங்கராச்சாரியார்கள் முடிவு
Subscribe to Oneindia Tamil
கலவை:
சங்கரராமன் கொலை வழக்கைத் தொடர்ந்து காஞ்சி சங்கர மடத்தில் தங்காமல் கலவை மடத்தில் தங்கியிருக்கும் ஜெயேந்திரரும்,விஜயேந்திரரும் மீண்டும் காஞ்சிபுரம் திரும்ப முடிவு செய்துள்ளனர்.
அங்கிருந்தபடியே பூஜைகளை நடத்தியும், பக்தர்களை சந்தித்தும் வரும் இரு சங்கராச்சாரியார்களும், மீண்டும் காஞ்சிபுரம்திரும்ப முடிவு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு இரு சங்கராச்சாரியார்களும் காஞ்சிபுரம் திரும்பவுள்ளனர்.
இருவரும் மீண்டும் வருவதையொட்டி காஞ்சி சங்கர மடத்தில் ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன. அறைகளைதூய்மைப்படுத்தும் வேலைகளும் வேறு சில வேலைகளும் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் இருவரும் காஞ்சிபுரம்திரும்புவார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications