வயர்லஸ்ஸில் ஆபாசமாக பேசிய போலீஸ்காரர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலீஸ் வயர்லஸ் மூலம், தாம்பரம் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு உயர் அதிகாரிகளை தரக்குறைவாக போலீஸ்காரர்பேசியதால் உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை புறநகரான தாம்பரம்- மதுரவாயல் நெடுஞ்சாலையில், குண்டு மேடு என்ற இடத்தில் காவல்துறை சோதனைச் சாவடிஉள்ளது. இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகம் என்பதாலும், சென்னைக்கு நுழையும் முக்கிய சாலை என்பதாலும் 24மணி நேரமும் போலீஸார் சோதனைச் சாவடியில் பணியில் இருப்பது வழக்கம்.

இந்த நிலையில் பீர்க்கங்கரணை காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் மதியழகன் என்பவர் இங்கு பணியில்அமர்த்தப்பட்டிருந்தார். அவருடன் இன்னொருவரும் பணியில் இருக்க வேண்டும். ஆனால் அவரை வேறு பணிக்கு மாற்றியஉயர் அதிகாரிகள், மதியழகனை மட்டும் சோதனைச் சாவடிப் பணிக்கு நியமித்திருந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மதியழகன், தாம்பரம் காவல் நிலையத்தை வயர்லஸ் மூலம் தொடர்பு கொண்டு, தன்னைமட்டும்பணியில் நியமித்தது ஏன் என்று கேட்டு ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசினார்.

வயர்லஸ்ஸில் மதியழகன் பேசியதைக் கேட்ட உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தாம்பரம் போலீஸார்விரைந்து சென்று மதியழகனை அங்கிருந்து அழைத்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். மதியழகன் குடித்து விட்டுபோதனையில் இப்படிப் பேசினாரா என்பது குறித்து அவரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+