காஞ்சி திரும்பும் ஜெயேந்திரர், விஜயேந்திரர்
சென்னை:
ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் காஞ்சி சங்கர மடம் திரும்புகின்றனர். இனிமேல் நிரந்தரமாக அங்கேயே தங்க முடிவு செய்துள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கி கைதாகிய ஜெயேந்திரர் ஜாமீனில் விடுதலையானவுடன் வேலூர் மாவட்டம் கலவை கிராமத்தில் உள்ள சங்கர மடத்திற்குச் சென்றுதங்கினார்.
கலவை மடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டதால் இனிமேல் இருவரும் நிரந்தரமாக அங்கேயே தங்கப் போவதாகக் கூறப்பட்டது. இந் நிலையில் திடீரென இருவரும்காஞ்சி மடத்துக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனர்.
அவர்கள் நாளை காலை கலவையில் இருந்து வேன் மூலம் காஞ்சிபுரம் வருகின்றனர். இருவருக்கும் சங்கர மடத்தில் பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள்செய்துள்ளனர்.
மேள தாளம் முழங்க நகர எல்லையிலிருந்து சங்கர மடம் வரை இருவரையும் ஊர்வலமாக அழைத்துச் செல்ல ஏற்பாடாகியுள்ளது. முன்னதாக அவர்கள் இன்றே காஞ்சிதிரும்பவுள்ளதாகக் கூறப்பட்டது.












Click it and Unblock the Notifications