காஞ்சி திரும்பும் ஜெயேந்திரர், விஜயேந்திரர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் காஞ்சி சங்கர மடம் திரும்புகின்றனர். இனிமேல் நிரந்தரமாக அங்கேயே தங்க முடிவு செய்துள்ளனர்.

சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கி கைதாகிய ஜெயேந்திரர் ஜாமீனில் விடுதலையானவுடன் வேலூர் மாவட்டம் கலவை கிராமத்தில் உள்ள சங்கர மடத்திற்குச் சென்றுதங்கினார்.

விஜயேந்திரர் ஜாமீனில் விடுதலையானவுடன், நீதிமன்ற நிபந்தனைப்படி சென்னையில் தங்கியிருந்தார். பின்னர் அவரும் கலவைக்கு சென்று தங்கினார். கடந்த ஏப்ரல்முதல் இரு சங்கராச்சாரியார்களும் கலவையில் தங்கியுள்ளனர்.

கலவை மடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டதால் இனிமேல் இருவரும் நிரந்தரமாக அங்கேயே தங்கப் போவதாகக் கூறப்பட்டது. இந் நிலையில் திடீரென இருவரும்காஞ்சி மடத்துக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனர்.

அவர்கள் நாளை காலை கலவையில் இருந்து வேன் மூலம் காஞ்சிபுரம் வருகின்றனர். இருவருக்கும் சங்கர மடத்தில் பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள்செய்துள்ளனர்.

மேள தாளம் முழங்க நகர எல்லையிலிருந்து சங்கர மடம் வரை இருவரையும் ஊர்வலமாக அழைத்துச் செல்ல ஏற்பாடாகியுள்ளது. முன்னதாக அவர்கள் இன்றே காஞ்சிதிரும்பவுள்ளதாகக் கூறப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+