ஜெயேந்திரர்: கருணாநிதி மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
சென்னை:
ஜெயேந்திரர் கைது விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மீது குற்றம் சாட்டி பேசியதாக கூறி திமுக தலைவர் கருணாநிதி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். ஜெயேந்திரரின் கைது குறித்து திமுக தலைவர்கருணாநிதி சில கருத்துக்களை கூறினார்.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நீதிபதியின் பரிசீலனைக்குப் பிறகு கருணாநிதி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
முரளி மனோகர் ஜோஷிக்கு சம்மன்:
இதே போல பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியும் ஜெயேந்திரர் கைது விவகாரம் தொடர்பாக சில கருத்துக்களைதெரிவித்திருந்தார். இவர் மீதும் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு சென்னை 3வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு நேற்று ஆஜராகும் படி முரளி மனோகர்ஜோஷிக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் 28ம் தேதி ஆஜராகும்படி முரளி மனோகர் ஜோஷிக்கு சம்மன்அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications