ஜெயேந்திரர் காஞ்சி திரும்பினார்
காஞ்சிபுரம்:
ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் இன்று காஞ்சி சங்கரமடம் திரும்பினர். அவருக்கு பக்தர்கள் மேளதாளம் முழங்க சிறப்பானவரவேற்பு அளித்தனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதான ஜெயேந்திரர் ஜாமீனில் விடுதலையானவுடன் வேலூர் மாவட்டம் கலவை கிராமத்தில்உள்ள சங்கர மடத்திற்குச் சென்று தங்கினார். அங்கு பூஜைகளை நடத்தி சங்கரமடப் பணிகளை கவனித்து வந்தார்.
விஜயேந்திரர் ஜாமீனில் விடுதலையானவுடன், நீதிமன்ற நிபந்தனைப்படி சென்னையில் தங்கியிருந்தார். பின்னர் அவரும்ஜெயேந்திரருடன் கலவைக்கு சென்று தங்கினார்.
கலவை மடத்தில் இவர்களுக்காக புதிய கட்டடம் கட்டப்பட்டதால் இனிமேல் இருவரும் நிரந்தரமாக அங்கேயே தங்கப்போவதாகக் கூறப்பட்டது. இந் நிலையில் திடீரென இருவரும் காஞ்சி மடத்துக்குத் திரும்ப முடிவு செய்தனர்.
இன்று காலை வேன் மூலம் இருவரும் காஞ்சி சங்கரமடம் திரும்பினர். அவர்களுக்கு சங்கரமடத்தில் பக்தர்கள் சார்பில்மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜெயேந்திரரிடம் ஆசிபெற்றனர்.












Click it and Unblock the Notifications