சென்னையில் அனல் காற்று: கடும் வெயிலுக்கு 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வெயில் கொடுமை தாங்காமல் சென்னையில் 3 பேர் பலியாகியுள்ளனர். இந் நிலையில் இன்றும் சென்னையில் தாங்க முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.இன்று 103 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் தமிழகத்தில் சென்னை, வேலூர் உட்பட பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயில் கொடுமையால் பகல் நேரங்களில்வெளியில் நடமாடவே மக்கள் அஞ்சுகின்றனர்.

சுட்டெரிக்கும் வெயிலுக்கு சென்னையில் 2 நாளில் 3 பேர் இறந்தனர். வால்டாக்ஸ் சாலையில் வெயில் கொடுமை தாங்காமல் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் சுருண்டுவிழுந்து இறந்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

ஜார்ஜ் டவுன் மலைய பெருமாள் கோவில் தெருவில் 70 வயது மதிக்கத்தக்க ஒருவரும், சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகே 55 வயது மதிக்கத்தக்க ஒருவரும்வெயில் தாங்காமல் இறந்தனர்.

இவர்கள் பெயர், விவரம் தெரியவில்லை. 3 பேரின் சடலங்களும் சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

இன்றும் சென்னையை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு சென்னையில் வெப்பம் நீடிக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள்தெரிவித்தனர். வழக்கமாக கோடை காலத்தில் பகல் 11 மணிக்கெல்லாம் கடற்காற்று வீசத் தொடங்கி விடும். இதனால் தரைக்காற்றின் வெப்பம் தணிந்து நிலப்பகுதிகுளிர்ச்சி அடைந்து விடும்.

ஆனால் தற்போது மாலை 4 மணிக்குப் பிறகு தான் கடற் காற்று வீசத் தொடங்குகிறது.மேற்கு பக்கத்திலிருந்து தரைக்காற்று பலமாக வீசுவதால் கடற்காற்றைநிலப்பரப்புக்குள் வரவிடாமல் தடுத்து விடுகிறது. இதனால் தான் நிலப்பரப்பில் வெப்பம் அதிகரிக்கிறது என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+