ஐ.நா. பாதுகாப்பு சபை: இந்தியா புதிய முடிவு
ஐ நா:
ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டால், 15 ஆண்டுகளுக்கு வீடோ அதிகாரத்தை விட்டுத்தருவதாக இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் அறிவித்துள்ளன.
இந் நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பின் வீடோ அதிகாரம் தந்தால் போதும், இப்போதைக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தைமட்டும் தந்தால் போதும் என இந்த நான்கு நாடுகளும் ஐ.நாவில் சுற்றிக்கை வெளியிட்டுள்ளன.
ஜி-4 என்ற பெயரில் குழுவாக இயங்கும் நான்கு நாடுகளும், ஐநா பாதுகாப்பு சபையில் தாற்காலிக உறுப்பினர்களின்எண்ணிக்கையை 15ல் இருந்து 25 ஆக உயர்த்த வேண்டும் என்றும் கோரியுள்ளன.
191 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐநா சபையில் இப்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியநாடுகள் மட்டுமே பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன.
இதில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக்க ரஷ்யா முழு ஆதரவு தெரிவித்துள்ளது. பிரிட்டனும் பிரான்சும் ஆதரவுவழங்கியுள்ளன. ஆனால், அமெரிக்காவும் சீனாவும் மறைமுகமாக இதை எதிர்த்து வருகின்றன.