அதிமுகவின் முறைகேடுகள் தவிடுபொடி: வாசன்
சென்னை:
போலி வாக்காளர்களை சேர்க்க அதிமுக மேற்கொண்ட முயற்சிகள், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியினரின் விழிப்புணர்வுகாரணமாக முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு விட்டதாக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மத்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இந்த வாய்ப்பை கூட்டணியினர் சரியான முறையில் பயன்படுத்துவார்களேயானால்,வருகிற சட்டசபை பொதுத் தேர்தலில் ஜனநாயக சக்திகளுக்கு ஆதரவான முடிவு கிடைக்கும்.
அதிமுகவின் அச்சுறுதலுக்குப் பயப்படாமல், தேர்தல் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தையேஅச்சுறுத்தும் வகையில் அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறது அதிமுக. இது கடும் கண்டனத்துக்குரியது. இவ்வாறுஅவதூறுகளை கூற அதிகவுக்கு எந்த உரிமையும் இல்லை.
போலி வாக்காளர்களை கண்டறிய தேர்தல் ஆணையம் நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதைக் கூட்டணியினர்சரியான முறையில் பயன்படுத்தி போலி வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்களையும், அவர்களது கட்சியையும்மக்களிடம் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் வாசன்.












Click it and Unblock the Notifications