For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆதியின் மனைவி தலைமறைவு?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆதிகேசவனின் மனைவி தலைமறைவாகி விட்டார். அவரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த ஆதி கேசவன், அவரது மகன் சாரதி, வலது கரமாக திகழ்ந்த ஜெயவீரன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.ஆதி கேசவன் கொடுத்த தகவல்களை வைத்து பல்வேறு விவரங்களைத் திரட்டிய போலீஸார் தற்போது சாரதி, ஜெயவீரன் ஆகியோர் மூலம் கிடைத்த தகவல்களைவைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் ஜெயவீரன் கொடுத்த சில தகவல்கள் தவறாக இருப்பது தெரிய வந்துள்ளது. மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள சீ ராக் என்ற ஹோட்டலில் ஆதிக்கு பங்குஇருப்பதாக ஜெயவீரன் கூறியிருந்தார்.

இதையடுத்து மும்பைக்கு விரைந்த போலீஸார் அங்கு சென்று விசாரித்தபோது, ஆதி கேசவனுக்கும் அந்த ஹோட்டலுக்கும் சம்பந்தமே இல்லை என்று தெரிய வந்தது.இதனால் போலீஸார் கடுப்படைந்துள்ளனர்.

இதற்கிடையே மும்பையைச் சேர்ந்த கண்டேல்வால் என்பவர் மூலம் ஆதியிடம் ஏமாந்த 3 பேர் குறித்து போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. மும்பை சென்ற தனிப்படைபோலீஸாரிடம் 3 பேரும் சென்று புகார் கொடுத்துள்ளனர்.

ஆனால் மோசடி மும்பையில் நடந்திருப்பதால் அங்குள்ள போலீஸாரிடம் புகார் கொடுக்குமாறு தமிழக போலீஸார் அவர்களை அறிவுறுத்தினர்.

இந் நிலையில், ஆதி கேசவன் கடன் மூலம் வாங்கிய 3 கார்களை கடன் தொகையை கட்டாததால் தங்களிடம் கொடுக்குமாறு கோரி கடனுதவி அளித்த நிதிநிறுவனங்கள் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளன.

இந்த மனுவிற்கு போலீஸார் அளித்த பதிலில், மோசடிப் பணத்தில் தான் இந்தக் கார்களை ஆதி கேசவன் வாங்கியுள்ளார். கடன் தொகையில் முக்கால்வாசியை அவர்கட்டி விட்டார். அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டு கார்களை நிதி நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.

இந்த மனு மீது இன்று (திங்கள்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

ஆதியின் மனைவி தலைமறைவு?

இதற்கிடையே ஆதியின் மோசடிகள், மோசடி மூலம் குவித்த சொத்துக்கள், யார் யாருக்கு எவ்வளவு பணப்பட்டுவாடா செய்தார் என்பது குறித்த விவரங்களை அறிந்தஅவரது மனைவியிடம் விசாரணை செய்ய தனிப்படை போலீஸார் முடிவு செய்தனர்.

இதன்படி ஆதியின் வீட்டுக்கு போலீஸார் சென்றனர். ஆனால் வீட்டில் அவர் இல்லை. அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரைதேடிக் கண்டுபிடித்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X