தேர்தல் நியாயமாக நடக்குமா? கருணாநிதி சந்தேகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இப்போதைய ஆட்சியாளர்களை வைத்துக் கொண்டு தமிழகத்தில் நியாயமான முறையில் தேர்தல் நடத்த முடியுமா என்பது பெரும் சந்தேகமாக உள்ளதாக திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்பு நடந்த தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறைக்கண்காணிப்பாளர்கள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

ஆனால் தேர்தல் முடிந்ததும் மீண்டும் அதே பொறுப்பில் அல்லது அதை விட முக்கியப் பதவிகளில் நியமிக்கப்பட்டனர்.

ஆட்சியாளர்களுக்கு உதவுவோர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முற்பட்டால் அதற்கு அதிகாரிகள் ஒத்துழைக்க மறுப்பது யாருடைய தூண்டுதலின்பேரில்? தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தால் ஆட்சியாளர்கள் காப்பாற்றி விடுவார்கள் என்பதால்தான் சில அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தை மதிக்காமல்செயல்படுகிறார்கள்.

இன்று ஆட்சி புரிவோர் முன்பு தேர்தல் நடத்திய விதம், அதிகாரத்தைப் பயன்படுத்திய விதம் ஆகியவற்றை நினைத்துப் பார்த்தால், சட்டசபைத் தேர்தல்நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் நடக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. இதை போக்கி தெளிவுபடுத்த வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.

ஆட்சியாளர்களின் முந்தைய செயல்பாடுகளை மனதில் கொண்டு எச்சரிக்கையுடன் தேர்தல் ஆணையம் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+