போலி பாஸ்போர்ட்: சென்னை விமான நிலையத்தில் 18 பெண்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலி ஆவணங்களுடன் சென்னையில் இருந்து குவைத்துக்கு செல்ல முயன்ற ஆந்திராவை மற்றும் கேரளாவை சேர்ந்த 18 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில், குவைத் செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக கும்பலாக பெண்கள் வந்தனர். அவர்களின் ஆவணங்களைகுடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அவர்களிடமிருந்த பாஸ்போர்ட்டுகள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது.

இந்தக் கும்பலில் மொத்தம் 18 பெண்கள் இருந்தனர். இவர்களில் ஒருவர் மட்டும் கேரளாவை சேர்ந்தவர். மீதமுள்ள அனைவரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள். இவர்கள்அனைவரும் குவைத்தில் வீட்டு வேலைக்கு செல்வதாக கூறினர்.

18 பேரையும் விமான நிலைய போலீஸாரிடம் குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இவர்களை கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா வந்த 100 பேர் கைது:

அரபு நாடுகளில் போலி இந்திய பாஸ்போர்ட்டுகள் தயாரிப்பது அதிகரித்து வருகிறது. இந்த போலி பாஸ்போர்ட்டுகளுடன் ஏராளமானோர் அரபு நாடுகளில்ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந் நிலையில், கேரளாவிலிருந்து சார்ஜாவுக்கு வேலை தேடிச்சென்ற 100க்கும் மேற்பட்டவர்கள் சமீபத்தில் கேரளா திரும்பினார்கள். அவர்களின் பாஸ்போர்ட்டுகளைசோதனை செய்த போது அவற்றில் பெரும்பாலானவை போலி எனத் தெரியவந்தது.

இதன் பேரில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 77 பேரும், கோழிக்கோடு விமான நிலையத்தில் 33 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து வெளியுறவுத் துறை இணை அமைச்சர் இ.அகமது கூறுகையில், வெளியுறவுத் துறை இந்தப் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கும். இது போன்றமோசடிகளை தடுக்க இரு நாடுகளும் இணைந்து முயற்சிகள் எடுக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+