மளிகை கடையிலும் ரூ. 6 லட்சம் "ஏப்பம் விட்ட ஆதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலுள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதற்காக பொருட்கள் வாங்கிய வகையில் மளிகைக் கடைக்காரரிடம் ரூ. 6லட்சத்தை ஆதிகேசவன் "ஏப்பம் விட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
எப்போதும் 40 பேர் புடை சூழ "பந்தாவாக உலா வரும் இவர், கோவில் விஷயத்திலும் தன்னுடைய மோசடி வித்தையை காட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.
சென்னை பாரிமுனையிலுள்ள காளிகாம்பாள் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வந்த ஆதி, அன்னதானம் செய்வதற்கு அருகிலுள்ள ஒரு மளிகைக்கடையில் பொருட்களை வாங்கியுள்ளார்.
சிறிது சிறிதாக இந்தக் கடன் ரூ. 6 லட்சத்தை எட்டி விட்டது. பணத்தை தரும்படி கேட்கும் மளிகைக் கடைக்காரரை ஆதிகேசவன் அடியாட்களை வைத்து மிரட்டியதாகத்தெரிகிறது. போலீஸாரின் விசாரணையில் ஆதியின் இந்த மளிகைக்கடை மோசடி தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications