For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. நாளை ஆண்டிப்பட்டி பயணம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா நாளை ஆண்டிப்பட்டி செல்கிறார். இதையொட்டி அவரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தென்மண்டல ஐ.ஜி. திரிபாதிதலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

தேர்தலை முன் கூட்டிய சந்திக்க முடிவு செய்துள்ள ஜெயலலிதா, மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துவருகிறார். இந்த வகையில் முதல் கூட்டம் ஜெயலலிதாவின் தொகுதியான ஆண்டிப்பட்டியில் நாளை நடக்கிறது.

இதில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவர், பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஆண்டிப்பட்டி செல்கிறார்.

ஜெயலிதாவின் வருகையையொட்டி ஆண்டிப்பட்டி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தோரணங்களும், வரவேற்பு வளைவுகளுமாக அமர்க்களப்பட்டு வருகிறது.ஜெயலிதாவை வரவேற்க அதிமுகவினர் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தென் மண்டல ஐ.ஜி. திரிபாதி, டி.ஐ.ஜி. ரவி ஆகியோரின் மேற்பார்வையில் எஸ்.பிக்கள் தினகரன்,வரதராஜன், கந்தசாமி, ராஜேந்திரன், கோவிந்தராஜ் மற்றும் 7 கூடுதல் எஸ்.பிக்கள், 11 டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2,000 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டி.ஐ.ஜி. ரவி கூறுகையில், விழா நடைபெறும் நேரத்தில் பஸ்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும். மதுரை-தேனி பஸ்கள் வைகை அணை வழியாக செல்லும்.விழாவுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X