விஜயகாந்தின் கட்சியில் வீரப்பனின் மனைவி?
சென்னை:
நடிகர் விஜயகாந்த் தொடங்கவுள்ள கட்சியில் சேர சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அவரது ரசிகர்கள் கட்சி உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிமாக ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்குத் தெரிந்தவர்கள், ஊரில் முக்கியமானவர்கள் மற்றும்பிரபலமானவர்களை என பலரையும் சந்தித்து விஜயகாந்த் ரசிகர்கள் புதிய கட்சிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
இதே போல சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியையும் விஜயகாந்த் ரசிகர்கள் சந்தித்து தங்களது கட்சியில் சேருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது விஜய்காந்துக்கு தெரிந்து நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால், கட்சியில் சேர முத்துலட்சுமி முன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முத்துலட்சுமி கூறுகையில், இன்றைய அரசியல் கட்சித் தலைவர்கள், சாதிக் கட்சித் தலைவர்களை விட விஜயகாந்த் எவ்வளவோ நல்லவர். ஏழைகளுக்கும் ஏராளமானஉதவிகளை செய்கிறார். ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்கிறார்.
இதனால் அவர் தொடங்கவுள்ள கட்சியில் சேருவது பற்றி நான் தீவிரமாக யோசனை செய்து வருகிறேன். ஆண்டவன் சித்தமும், மக்களோட ஆதரவும் இருந்தால் நடக்கவேண்டியது நல்லபடியாக நடக்கும் என்று கூறியுள்ளார்.
விஜய்காந்தின் மதுரை அரசியல் கட்சி தொடக்க மாநாட்டிலேயே முத்துலட்சுமியின் அரசியல் பிரவேசமும் இருக்கும் என்று தெரிகிறது.