உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: வக்கீல்கள் எச்சரிக்கை
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் காலியாக உள்ள 25 நீதிபதிகள் இடங்களை வருகிற 30ம் தேதிக்குள் நியமிக்காவிட்டால் தமிழகம் முழுவதும்நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படும் என சென்னை பார் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த வகையில் பார்த்தால் உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் மொத்தம் 45 முதல் 49 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால் இப்போது 24 பேர் தான் உள்ளனர்.இதனால் வழக்கு விசாரணை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய நீதிபதிகள் பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை மத்திய அரசுக்கு அனுப்பியும் அதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. அப் பட்டியல்களைபரிசீலிக்கக் கூட இல்லை. சமீபத்தில் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ 24 பேர் கொண்ட பட்டியலை அனுப்பியுள்ளார். இதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலை பரிசீலித்து, வருகிற 30ம் தேதிக்குள் நீதிபதி காலியிடங்களை நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம்முழுவதும் உள்ள வழக்கறிஞர்களுடன் கலந்து பேசி காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட வேண்டி வரும். மேலும், உயர்நீதிமன்றத்தில்பொது நலன் வழக்கையும் தொடர முடிவு செய்துள்ளோம் என்றார் தமிழ்மணி.












Click it and Unblock the Notifications