மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

சேலம்:

மழை காரணமாக மேட்டூர் அணைக்கு திடீரென நீர் வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை வறண்டு போய்க் கிடப்பதால், இந்த ஆண்டும் ஜூன் 12ம் தேதி அணையைத் திறக்கப்படவில்லை.

இதனால் தஞ்சை மாவட்ட விவசாயிகள் 4வது ஆண்டாக சம்பா பயிரிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கர்நாடகம் நீரைத் திறந்து விடாததும், போதிய மழைபெய்யாததும், நீரைப் பெற தமிழக அரசின் சார்பில் கர்நாடகத்துடன் இதுவரை பேச்சு ஏதும் நடத்தப்படாததுமே இதற்குக் காரணம்.

அணையின் நீர் இருப்பு 90 அடியாக இருந்தால்தான் அணையைத் திறக்க முடியும் என்று பொதுப் பணித்துறை பொறியாளர்கள் கூறியுள்ளனர்.

இந் நிலையில் விவசாயிகளுக்கு லேசான உற்சாகத்தைக் கொடுக்கும் வகையில் மேட்டூர் அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதியில் கடந்த 2 நாட்களாக லேசான மழைபெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து ஓரளவு அதிகரித்துள்ளது.

அணைக்கு தற்போது விநாடிக்கு 1,091 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 53.80 அடியாக உள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தால்,கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்து விட்டால் நீர் இருப்பு கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+