For Quick Alerts
For Daily Alerts
Just In
சேது சமுத்திர விழா: தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு மாற்றம்
மதுரை:
சேது சமுத்திரத் திட்ட துவக்க விழா மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுதெரிவித்துள்ளார்.
இந் நிலையில் துவக்க விழா நடைபெறும் இடம் மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளதாக டி.ஆர்.பாலு இன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சேது சமுத்திரத் திட்ட துவக்க விழா மதுரையில் நடைபெறும். எந்த தேதியில் நடைபெறும் என்பதுகுறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
விழாவுக்காக மதுரை வண்டியூர்-பாண்டி கோவில் ரிங்ரோடு பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வசதியாகவும், விரைவாகவும் வந்து செல்வதற்காகத் தான் மதுரை தேர்வுசெய்யப்பட்டதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
Comments
Story first published: Saturday, June 18, 2005, 5:30 [IST]