சேது திட்ட விழா: மதுரையில் பிரதமரின் பாதுகாப்பு படை ஆய்வு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் சேது சமுத்திர திட்ட தொடக்க விழா நடைபெறவுள்ள இடத்தை பிரதமரின் பாதுகாப்புப் படையினர் இன்று ஆய்வுசெய்தனர்.

சேது சமுத்திர திட்ட தொடக்க விழா முதலில் தூத்துக்குடியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று மதுரைவந்த மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, விழா மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்காக மதுரை ரிங் ரோட்டிலுள்ள பாண்டி கோவில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விழாவில் பிரதமர்மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பலர் கலந்து கொள்ளவிருப்பதாகவும்தெரிவித்தார்.

அடுத்த மாதம் (ஜூலை) விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந் நிலையில், விழா நடைபெறும் மதுரை ரிங் ரோடு அருகே உள்ள இடத்தை இன்று பிரதமரின் பாதுகாப்புப் படையினர் ஆய்வுசெய்தனர். இன்று காலை வந்த அவர்கள் பிரதமருக்கு அளிக்க வேணடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையே சேது சமுத்திர திட்டம் தொடர்பாக சூயஸ் கால்வாய் அதிகாரிகளுக்கும், இந்திய அரசு அதிகாரிகளுக்கும் இடையேஇன்னும் இரண்டு வாரத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட உள்ளது.

இது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ள மத்திய கப்பல் துறை அமைச்சக இணைச் செயலாளர் பல்லா, தூத்துக்குடி துறைமுகசேர்மன் ரகுபதி ஆகியோர் கெய்ரோவிற்கு நேற்று புறப்பட்டு சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+