நாளை கண்டதேவி கோவில் தேரோட்டம்: 2,500 போலீஸார் குவிப்பு
தேவகோட்டை:
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கண்டதேவி கோவில் தேரோட்டத்தை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும்செய்யப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் 2 பிரிவினரிடையே மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் பாட்டீல்பேச்சு வார்த்தை நடத்தினார். இன்றும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந் நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் பாட்டீல் கூறுகையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படிதேரோட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் சுமார் 2,500 போலீஸார்ஈடுபடுத்தப்படுவார்கள். கமாண்டோ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இதற்கிடையே இன்று உயர்நீதிமன்றத்தில் வேறு ஒரு வழக்கின் போது ஆஜரான தலைமை வழக்கறிஞர்என்.ஆர்.சந்திரனிடம், கண்டதேவி கோவில் தேரோட்ட விழாவில் தலித் சமுதாயத்தினரும் பங்கேற்கசெய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தலைமை நீதிபதி கட்ஜூ கேட்டார்.
அதற்கு என்.ஆர்.சந்திரன், தலித் சமுதாயத்தினர் உள்பட இந்து மதத்தின் அனைத்துத் தரப்பினரும் தேரோட்டவிழாவில் பங்கேற்பதற்கு வசதியாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications