தமிழின் எதிர்காலம் தமிழர்கள் கையில்: மலேசியாவில் ராமதாஸ் பேச்சு

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர் :

தமிழ் மொழி சீரழியாமல் இருப்பது, வளமடைவதும் தமிழர்களாகிய நமது கையில்தான் இருக்கிறது என்றுபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தமிழ் பாதுகாப்பு இயக்க நிறுவனர்களில் ஒருவருமான டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் விஜிபி உலக தமிழ்ச் சங்கத்தின் சார்பில் உலக திருக்குறள் ஆராய்ச்சிமாநாடு நடந்தது. 3 நாள் மாநாட்டில் ராமதாஸ், ஆர்.எம்.வீரப்பன், மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு,

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பாமக தலைவர்ஜி.கே.மணி, திமுக சார்பில் சா. கணேசன், தொழிலதிபர் வி.ஜி சந்தோஷம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின்போது விஜிபி உலக தமிழ்ச் சங்கம் நன்கொடையாக வழங்கிய திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டது. டத்தோ சாமிவேலு இந்தச் சிலையை திறந்து வைத்தார்.

மாநாட்டில் ராமதாஸ் பேசுகையில், உலகப் பொதுமறையாம் திருக்குறள், தமிழ், தமிழர், தமிழ்நாட்டு நலனுக்குமட்டுமல்லாமல், அனைத்து இனம், மதம், மொழி என்று உலகெங்கும் வாழும் மனிதர்களின் வாழ்வியலைப் பற்றிஎடுத்துக் கூறும் நூல் ஆகும்.

எல்லா நிலைகளுக்கும் ஏற்ற வகையில், அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்ட பொருள் பொதிந்த நூல்இது.

இன்று தமிழர்கள், தாங்கள் பேசும் தமிழில் பிற மொழி வார்த்தைகளை கலந்து பேசும் கலப்பு மொழியாகவே தமிழ்உள்ளது. உலகின் தொன்மையான மொழிகளில் தமிழும் ஒன்று. இதில் இல்லாத வார்த்தைகளே இல்லை எனலாம்.

இலக்கண வளம், இளக்கிய வளம் நிறைந்தது நமது தமிழ் மொழி. இத்தகைய சிறப்பு மிக்க தமிழ் மொழியில்திருக்குறள் எழுதப்பட்டது நமக்கெல்லாம் மிகப் பெரும் பெருமையாகும்.

இத்தகைய தொன்மையும், சிறப்பும், பாரம்பரியமும் மிக்க நமது தமிழ் மொழி வளமடைவதும், சீரழியாமல்இருப்பதும் தமிழர்களாகிய நமது கையில்தான் இருக்கிறது என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+