ரவிக்கு மிரட்டல்: 2 பெண் வழக்கறிஞர்கள் மீது குற்றப் பத்திரிக்கை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில், அப்ரூவர் ரவி சுப்பிரமணியத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்டவழக்கில் 2 பெண் வழக்கறிஞர்கள் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
சங்கர ராமன் கொலை வழக்கில் அப்ரூவரான கான்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியம் காஞ்சிபுரம் சிறையில்அடைக்கப்பட்டார். அப்போது அவரை பெண் வழக்கறிஞர்கள் நசீரா பானு, ரேவதி ஆகியோர் சிறையில் சந்தித்துஜெயேந்திரருக்கு ஆதரவாக வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பாக, ரவி சுப்பிரமணியத்தின் மனைவி சித்ரா, போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார்வழக்குப் பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர்கள் இருவரும் முன்ஜாமீன் பெற்றனர்.
இந்த வழக்கில், விஷ்ணு காஞ்சி போலீசார் கடந்த 16ம் தேதி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தனர்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண் வழக்கறிஞர்கள் இருவரும் வரும் 30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications