நாகை வருகிறார் அப்துல் கலாம்
திருச்சி:
நாகப்பட்டனம் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 29ம்தேதி திருச்சி வருகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி தாக்குதல் நடந்தபோது, பாதிக்கப்பட்ட பகுதிகளை அப்போதே வந்து பார்த்துச்சென்றார் கலாம். இதைத் தொடர்ந்த நாகைக்கு அவர் மீண்டும் வருகிறார்.
29ம் தேதி மாலை 5 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி வரும் கலாம் அன்று இரவு அங்கேயே தங்குகிறார். மறு நாள் காலை7.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் நாகை செல்கிறார் கலாம். சுனாமியால் பாதிக்கப்பட்டு தற்காலிக குடியிருப்புகளில்தங்கியிருப்பவர்களை அவர் சந்தித்துப் பேசுகிறார்.
அன்று இரவு நாகையில் தங்கும் கலாம் பின்னர் அடுத்த நாள் (ஜூலை 1ம்தேதி) தரங்கம்பாடி சென்று அங்கு சுனாமியால்பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறார். பின்னர் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தையும் அவர் பார்வையிடுகிறார்.
இந்த பயணத்திற்குப் பின்னர் முற்பகல் 11.30 மணிக்கு மீண்டும் திருச்சி வந்து அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.கலாம் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications