நுழைவுத் தேர்வு ரத்துக்கு உயர்நீதிமன்றம் தடை

Subscribe to Oneindia Tamil

சன்னை:

பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சென்னைஉயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான மருத்துவ, பொறியியல் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு, இம்ப்ரூவ்மென்ட் தேர்வு அடிப்படையில்நடைபெறாது, பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் தான் நடைபெறும் என தமிழக அரசு கடந்த 9ம் தேதி அறிவித்தது.

நுழைவுத் தேர்வும், இம்ப்ரூவ்மென்ட் தேர்வும் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து200க்கும் மேற்பட்ட மாணவர்கள், சென்னைஉயர்நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை ஆதரித்து பாமக சார்பிலும், தொழில், கலை, அறிவியல் கல்லூரிகள் கூட்டமைப்பின்சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச்விசாரித்தது. 2 நாட்கள் விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தவழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதன் படி, மனுக்களை விசாரித்த நீதிபதிகள், நுழைவுத் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்துதீர்ப்பளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+