நுழைவுத் தேர்வு ரத்துக்கு தடை: சென்னையில் பாமக இன்று போராட்டம்
சென்னை:
நுழைவுத் தேர்வை ரத்து செய்ய அவசரச் சட்டம் பிறப்பிக்கக் கோரி சென்னையில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பாட்டாளிமக்கள் கட்சியினர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: நுழைவுத் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவுக்குசென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது அதிர்ச்சியைத் தருகிறது.
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மகிழ்ச்சியில் திளைத்த ஏழை, எளிய மாணவ, மாணவியர் இப்போது அதிர்ச்சியில்மூழ்கியுள்ளனர். வசதியும், வாய்ப்பும் உள்ளவர்கள் சட்டத்திற்குள் நுழைந்து தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்கின்றனர்.
வசதியும், வாய்ப்பும் இல்லாத ஏழை, எளிய, கிராமப்புற மக்கள் சிலந்திக் கூட்டில் சிக்கிக் கொண்ட பூச்சிகளைப் போல்ஆதரவற்று அனாதையாக இருக்கிறார்கள். நுழைவுத் தேர்வை ரத்து செய்தது அரசின் கொள்கை முடிவு. கொள்கை முடிவுகள்சட்டமாகத் தான் வந்திருக்க வேண்டும்.
ஆனால் சாதாரண ஒரு உத்தரவைப் போல அரசு இதைப் பிறப்பித்துள்ளது. இதை நான் அப்போதே சுட்டிக் காட்டி, அவசரசட்டமாக இதை பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தேன். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. உடனடியாகசட்டசபையைக் கூட்டி அவசரச் சட்டமாக இதை பிறப்பிக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதால் ஒரு பயனும் இருக்காது. ஏற்கனவே தமிழக அரசுதொடர்ந்துள்ள பல வழக்குகளில் இன்னும் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றன.
நுழைவுத் தேர்வை ரத்து செய்ய அவசர சட்டம் பிறப்பிக்கக் கோரி சென்னையில் பாமக மாணவர் சங்கம் சார்பில் இன்றுஆர்ப்பாட்டம் நடைபெறும். அப்போராட்டத்திற்கு நானே தலைமை தாங்குகிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.