இந்தியா, அமெரிக்கா: பாதுகாப்பு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது
வாஷிங்டன்:
இந்தியா, அமெரிக்கா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. 10 ஆண்டுக்கான இந்த ஒப்பந்தத்தில்பிரணாப் முகர்ஜியும், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சரும் கையெழுத்திட்டனர்.
இம் மாத தொடக்கத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது இந்தியா, அமெரிக்காஇடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக நடந்த பல பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இன்று பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அமெரிக்கபாதுகாப்புத் துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பெல்டும் கையெழுத்திட்டனர்.
10 ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ உறவினை மேம்படுத்துதல், உயர்தொழில்நுட்பத்தினை பகிர்ந்து கொள்ளுதல், தீவிரவாத செயல்களை தடுத்தல், ஆயுத தயாரிப்பு ஆகியவையும் அடங்கும்.
இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாககருதப்படுகிறது.