சேது: சீர்குலைக்க அதிமுக சதி - டி.ஆர்.பாலு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
சேது சமுத்திரத் திட்டத்தொடக்க விழாவை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட அதிமுக திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைதகவல் தெரிவித்துள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சதிச் செயலை தடுக்க காவல்துறை உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். தமிழர்களின் ஒன்றரை நூற்றாண்டுகால கனவு நனவாகப் போகும் நேரத்தில் அதை சீர்குலைக்க முயற்சித்தால் அவர்களை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்என்பதை பொறுப்புடனும், கடமையுணர்வுடனும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் பாலு.
இதற்கிடையே, மதுரையில் நாளை நடைபெறவுள்ள தொடக்க விழாவையொட்டி மதுரை நகர் முழுவதும் போலீஸார்குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரை நகரின் எல்லைப் பகுதிகளில் வாகனத் தணிக்கையும்தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications