புதிய அரசு பொது மருத்துவமனை: ஜெ. திறந்து வைத்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் ரூ. 104 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு பொது மருத்துவமனையின் புதிய கட்டடங்களை முதல்வர்ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையின் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புதிதாக தலா 7 மாடிகளைக்கொண்ட இரண்டு கட்டடங்கள் ரூ. 104 கோடியில் கட்டப்பட்டுள்ளன.

இவற்றில் அதி நவீன மருத்துவ சாதனங்கள், படுக்கை வசதிகள், அறுவைச் சிகிச்சை அரங்குகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

புதிய மருத்துவமனையில் 3600க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. 16 அறுவைச் சிகிச்சை அரங்குகள் இடம் பெற்றுள்ளன.குளு குளு வசதி செய்யப்பட்ட 120 வார்டுகளும் உள்ளன. 18 இடங்களில் லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசியாவிலேயேமிகப் பெரிய அரசு பொது மருத்துவமனையாக இது உருவாகியுள்ளது.

இவற்றின் திறப்பு விழா இன்று பகல் 1 மணியளவில் நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு புதியகட்டடங்களைத் திறந்து வைத்தார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள எலும்பு வங்கியையும் திறந்து வைத்து அவர் பேசுகையில்,பல்வேறு மருத்துவ ஜாம்பவான்கள் பணிபுரிந்த இந்த சென்னை அரசு பொது மருத்துவமனை,

புகழ் பெற்ற மருத்துவர்களை உருவாக்கிய இந்த மருத்துவமனை, தனித்திறமை வாய்ந்த மருத்துவர்கள் பணியாற்றும் இந்தமருத்துவமனை இன்று பெற்றிருக்கும் புதிய கட்டட வசதியோடும், நவீன கருவிகளின் வசதியோடும் மக்களுக்குப்பணியாற்றுவதில்,

குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு பணியாற்றுவதில் புதிய வரலாற்றை நிச்சயம் படைக்கும் என்றார்.

விழாவில் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், தளவாய் சுந்தரம், தலைமைச் செயலாளர் நாராயணன், காதாரத் துறை செயலாளர்ஷீலாராணி ங்கத், மருத்துவ கல்வி இயக்குனர் விஜயலெட்சுமி, மருத்துவக் கல்லூரி முதல்வர் கலாவதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+