பா.விஜய்க்கு கருணாநிதி சூட்டிய பட்டம்!
சென்னை:
கவிஞர் பா.விஜய்க்கு வித்தகக் கவிஞர் என்ற பட்டத்தை திமுக தலைவர் கருணாநிதி சூட்டினார்.
கவிஞர் பா.விஜய் எழுதிய 12 நூல்களின் வெளியீடு சென்னையில் வியாழக்கிழமை நடந்தது. திமுக தலைவர்கருணாநிதி கலந்து கொண்டு இந்த நூல்களை வெளியிட்டார்.
கவிஞர் வாலி, ராமாயணக் காதையை கவிதை நடையில் சிறப்பாக எழுதியதால் அவருக்கு காவியக் கவிஞர்என்ற பட்டத்தைக் கொடுத்தேன்.
இளையராஜாவுக்கு இசை ஞானி என்ற பட்டத்தையும், வைரமுத்துவுக்கு கவிப்பேரரசு பட்டத்தையும் நான் தான்கொடுத்தேன். இந்தப் பட்டங்களெல்லாம் இன்னும் நீடிக்கின்றன.
இந்த வரிசையில் கவிஞர் பா.விஜய்யை சேர்க்க விரும்பினேன். அதற்காக அவருக்கு வித்தகக் கவிஞர் என்றபட்டத்தை சூட்டுகிறேன். அவர் எழுதிய 12 நூல்களையும் படித்து விட்டுத் தான் இந்த விழாவுக்கு வந்தேன்.அவரது எழுத்துக்களைப் படித்துப் பார்த்து விட்டுத் தான் இந்தப் பட்டத்தையும் சூட்டுகிறேன்.
எனக்கு கைராசி இருக்கிறதோ இல்லையோ தெரியாது. ஆனால் பட்டம் வழங்குவதில் வாய் ராசி உண்டு என்றார்கருணாநிதி.
நிகழ்ச்சியில் கமல்ஹாசன், கவிஞர் வாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications