சுனாமி: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 1 லட்சம் செலவில் வீடுகள்
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக வங்கி நிதியுதவுயிடன் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்குகின்றன.
தமிழ்நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சுமார் 1 லட்சம் குடும்பங்கள் தற்காலிக வீடுகளிலும், மண்டபங்களிலும் தங்கவக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிரந்தர வீடு கட்டிக் கொடுக்க உலக வங்கியிடம் உதவி கேட்கப்பட்டிருந்தது.
சென்னை, செங்கல்பட்டு பகுதி மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் 23,800 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன.இதற்காக ரூ. 460 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் கலெக்டர்கள் இடங்களை தேர்வு செய்து வீடுகளைக்கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ரூ.1 லட்சம் செலவில் கட்டப்படும் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அறை, சமயலறை மற்றும் கழிப்பறை வசதிசெய்யப்படும். 3 மாடி வீடுகளாக இவை கட்டப்படுகின்றன. அடுத்த மாதம் (ஆகஸ்ட்) இதற்கான பணிகள் தொடங்குகிறது.












Click it and Unblock the Notifications