மாவட்ட நிர்வாகிகளுடன் கருணாநிதி ஆலோசனை
சென்னை:
திமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களுடன் அக்கட்சியின் தலைவர் கருணாநிதிஆலோசனை நடத்தவுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் மாவட்ட வாரியாக கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. அண்ணாஅறிவாலயம் வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வருகிற 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை இந்த கலந்தாய்வுக் கூட்டங்கள்நடைபெறவுள்ளன.
மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றஉறுப்பினர்கள் இதில் கலந்து கொள்வார்கள். வாக்காளர் பட்டியல் சரி பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
18, 19, 20 ஆகிய தேதிகளில் வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி,கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டநிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
21, 22, 23, 24, 25, 26 ஆகிய நாட்களில் கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை,ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை புறநகர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்ட நிர்வாகிகளும்,
27ம் தேதி கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருவாரூர், நாகை, தஞ்சை ஆகிய மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொள்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.