மக்கள் அமைதி காக்க பிரதமர் கோரிக்கை
டெல்லி:
மக்கள் அமைதியைக் கடைபிடிக்குமாறும், நாட்டில் அமைதியை நிலை நாட்ட மாநில அரசுகள் உதவ வேண்டும் என்றும்பிரதமர் மன்மோகன் சிங் கோரியுள்ளார். எல்லா வகையான தீவிரவாதத்தையும் மத்திய அரசு ஒடுக்கும் எனவும் என அவர்தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து தனது செய்தித் தொடர்பாளர் சஞ்சய பாரு மூலம் பிரதமர் வெளியிட்டசெய்தியில்,
இந்தத் தாக்குதல் மிகக் கடுமையான கண்டனத்துக்குரியது. நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் இது போன்றசெயல்களை மத்திய அரசு அடக்கி, ஒடுக்கும். அனைத்து வகையான தீவிரவாதமும் ஒடுக்கப்படும்.
இந்தத் தாக்குதலை மத்திய அரசு மிக தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. முக்கிய இடங்கள், நினைவுச் சின்னங்களுக்குபாதுகாப்பை பலப்படுத்தவும், அமைதிக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளுமாறும் மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் துரதிஷ்டவசமானது. ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்தத் தாக்குதலால் அந்தக் கட்டடத்துக்கு எந்தச் சேதமும்ஏற்படவில்லை.
இது போன்ற செயல்களை மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகள் மூலம் ஒடுக்கும். நாட்டில் அமைதியை பராமரிக்கஅனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இந்த இக்கட்டான நேரத்தில் மக்கள் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும். நாட்டில் அமைதியை நிலை நாட்ட மாநில அரசுகள்உதவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இச் சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவுடன் பிரதமர் தொலைபேசியில் ஆலோசித்தார். மாநிலத்தில்அமைதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்குமாறு உத்தரவிட்டார்.
லாலு கண்டனம்:
தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், அயோத்தியில் சர்ச்சைக்குரியஇடத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications