டெல்லி, மும்பை, பெங்களூரில் பலத்த பாதுகாப்பு
டெல்லி:
அயோத்தியில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், அகமதாபாத்உட்பட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் முக்கிய கோவில்களும் வழிபாட்டுத் தலங்களும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நகர போலீஸ் கமிஷ்னர் ராய் தெரிவித்துள்ளார். அதே போல பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்கும் கமாண்டோ படைபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நகரில் மதரீதியில் பிரச்சனை நிறைந்த பகுதிகளில் போலீசாரின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதே போல ஆந்திரப் பிரதேசத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஹைதராபாத்-செகந்திராபாத் இரட்டை நகர்களில்மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷ்னர் தினேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதே போல போபால் உள்பட மத்தியப் பிரதேசத்தின் முக்கிய பகுதிகளிலும், கொல்கத்தா உள்பட மேற்கு வங்கத்தின் பலபகுதிகளிலும், பிகார் மாநிலம் முழுவதும், அஸ்ஸாம், திரிபுராவிலும்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரிலும் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
இதே போல தலைநகர் டெல்லியிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாஜக, ஆர்எஸ்எஸ்அலுவலகங்களுக்கும் கோவில்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந் நிலையில் இந்தத் தாக்குதலுக்கு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications