அயோத்தி: அமைதி காக்க கருணாநிதி வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அயோத்தி தாக்குதலை அரசியலாக்கி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜகவும், சங் பரிவாரும் முயற்சிக்கிறது. எனவேஅனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனால் பிரச்சினையை பெரிது படுத்தாமல் எல்லோரும் அமைதி காக்க வேண்டும். சில இடங்களில் பாகிஸ்தான் கொடிகளைபஜ்ரங் தள அமைப்பினர் எரித்துள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அயோத்தி விவகாரத்தால் நாட்டில் எந்த குழப்பமும் ஏற்படாது. அத்வானியின் ரதயாத்திரையின் போதும், பாபர் மசூதிதகர்க்கப்பட்ட போதும் ஏற்பட்ட கலவரத்தைப் போல மீண்டும் ஏற்படுத்தலாம் என்று சிலர் கருதுகின்றனர். எனவே எரிகிற தீயில்யாரும் எண்ணை ஊற்ற முயற்சிக்க வேண்டாம் என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications