சிவராஜ் பாட்டீல் இன்று அயோத்தி பயணம்
டெல்லி:
மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இன்று அயோத்தி செல்கிறார். அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புஏற்பாடுகளை குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆய்வு நடத்துகிறார்.
இது தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், அயோத்தியில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகுஅங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் விவாதிப்பதற்காக உள்துறை அமைச்சர்சிவராஜ் பாட்டீல் இன்று அயோத்தி செல்கிறார்.
அவருடன் அரசியல் கட்சித் தலைவர்களான சீதாராம் யெச்சூரி, சத்யபிரத் சதுர்வேதி, சல்மான் குர்ஷித் ஆகியோரும்செல்கின்றனர். அயோத்தியில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு உத்திர பிரதேச மாநில முதல்வர்முலாயம் சிங் யாதவ் மற்றும் அம்மாநில போலீஸ் அதிகாரிகளுடனும் பாட்டீல் ஆலோசனை நடத்துவார்.
இதன் பிறகு, தீவிரவாதிகளின் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய ரிசர்வ் படையைசேர்ந்த போலீஸாரையும் அவர் சந்திப்பார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications