காங்கிரசில் குழப்பம் ஏற்படுத்த அதிமுக சதி: வாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சியில் அவரைப் புகழ்ந்து பேசியதால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விநாயக மூர்த்தி மீது நடவடிக்கைஎடுக்கப்படாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் வாசன் பேசுகையில், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவரைப்புகழ்ந்து விநாயக மூர்த்தி பேசியதால் காங்கிரஸ் கட்சியிலோ அல்லது கூட்டணியிலோ எந்தக் குழப்பம் இல்லை.

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை சோனியா காந்தி தான் தலைவர். அவரது முடிவுக்கும், கொள்கைக்கும் மாறாக யாருமேநடக்க மாட்டார்கள். இதை விநாயக மூர்த்தியும் தெளிவுபடுத்தியுள்ளார்.

நாங்கள் அனைவருமே இதில் மிகத் தெளிவாக உள்ளோம். சோனியாவின் கட்டளையை மீற மாட்டேன் என்று விநாயகமூர்த்தியும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த அதிமுக முயலுகிறது. ஆனால் அது நடக்காது. சோனியாவின் பின்னால் காங்கிரஸ்கட்சி அணிவகுத்து நிற்கிறது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சிக்குள் சிலர் முயல்வதாக கூறப்படுவதுபொய்யானது.

அப்படியே யாராவது நினைத்தாலும் அது கட்சியின் தலைமைக்கு எதிரானது. கட்சி மேலிடத்தின் ஒட்டுமொத்த உணர்வைபிரதிபலிப்பவர்கள் தான் உண்மையான காங்கிரஸ்காரர்களாக இருக்க முடியும்.

திமுக தலைமையிலான கூட்டணியின் முயற்சியால் வரலாற்றுச் சிறப்பு மிக்க சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறப் போகிறது.முதல் கட்டமாக வெற்றிகரமாக தொடக்க விழா சிறப்பாக நடந்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டு காலத்தில் அதிமுக அரசு செய்யாத சாதனைகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒரே ஆண்டில்செய்துள்ளது என்றார் வாசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+