அலகாபாத் நீதிமன்ற உத்தரவு பின்னடைவு அல்ல- அத்வானி
டெல்லி:
பாபர் மசூதி இடிப்பு விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பற்றி நான் கவலைப்படப் போவதில்லைஎன்று அத்வானி கூறியுள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் விஎச்பிதலைவர்கள் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் மீதான வழக்கு ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இந் நிலையில் இந்த வழக்கிலிருந்து அத்வானி உட்பட 8 பேரையும் ரேபரேலி நீதிமன்றம் விடுவித்தது. இதை எதிர்த்துஅலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அத்வானி உட்பட 8 பேரையும் ரேபரேலி நீதிமன்றம் விடுவித்தது தவறு என்றும்வருகிற 28ம் தேதி அத்வானி உட்பட அனைவரும் ரேபபேலி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அத்வானிக்கு ஒரு பின்னடைவு என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந் நிலையில் இது குறித்து டெல்லியில் அத்வானி கூறுகையில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்னை எந்தவிதத்திலும் பாதிக்காது. அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. இந்த வழக்கு முடிய இன்னும் பல ஆண்டுகள்ஆகலாம். இந்த உத்தரவவால் பாஜகவில் எந்த குழப்பமும் ஏற்படாது என்றார்.