சீன அழகிப் போட்டிக்கு செல்லும் "மிஸ் சென்னை
சென்னை:
சீனாவில் நடைபெறவுள்ள இன்டர் கான்டினென்டல் - 2005 அழகிப் போட்டியில் "மிஸ் சென்னை தீபா ராஜன் கலந்துகொள்கிறார்.
சென்னையில் சமீபத்தில் நடந்த "மிஸ் சென்னைஅழகிப் போட்டியில் தீபா ராஜன் முதல் பரிசு பெற்றார். இவர், சீனாவில் வரும்30ம் தேதி நடைபெறவுள்ள இன்டர் கான்டினென்டல் அழகிப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சீனா ஹூயாங்கான் நகரில் நடைபெறவுள்ள இந்த 34வது அழகிப் போட்டியில் 69 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொள்கின்றனர். இந்தியா சார்பில் "மிஸ் சென்னை அழகி தீபா ராஜன் பங்கேற்கிறார்.
சென்னையில் உள்ள கிரசன்ட் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். பட்டம் பெற்றுள்ள இவர், ஒரு பரத நாட்டியக் கலைஞர்.இவரது பெற்றோர்கள் துபாயில் வசிக்கின்றனர். தீபா தனது சகோதரனுடன் சென்னையில் வசித்து வருகிறார்.
சென்னையில் இருந்து இன்று சீனாவுக்கு புறப்படும் தீபா ராஜன் நிருபர்களிடம் கூறுகையில்,
சீனாவில் ஹூயாங்கான் நகரில் நடைபெறும் அழகிப் போட்டியில், அங்கு சென்றது முதல் தொடர்ந்து 20 நாட்கள் போட்டியில்கலந்து கொள்பவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.
பேஷன் ஷோ, மலையேற்றம், தனி நபர் திறமை, ஒட்டுமொத்த தனித் திறமை, சமூக பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு என்றுபல்வேறு சுற்றுப் போட்டிகள் நடைபெறும்.
இந்தியா சார்பில் பங்கேற்கும் போது இந்திய பாரம்பரிய உடை, நீச்சலுடை, மாலை நேர விருந்துக்கு அணியும் கவுன் என்று 3வகையான உடையலங்காரப் போட்டிகளிலும் பங்கேற்கிறேன். இறுதிப் போட்டி வரும் 30ம் தேதி நடக்கிறது. அழகும்,திறமையும் எனக்கு இருப்பதாக நம்புகிறேன். போட்டியில் வெற்றி பெற்று பட்டத்துடன் திரும்பி வருவேன் என்ற நம்பிக்கைஉள்ளது என்றார்.