குற்றவியல் சட்டம்: போராட்டம் தொடரும்- சென்னை வழக்கறிஞர்கள் அறிவிப்பு
சென்னை:
குற்றவியல் நடைமுறைச் சட்டங்களை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தொடர்ந்து நீதிமன்றப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தங்களை நீக்கக் கோரி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வழக்கறிஞர்கள் கடந்ததிங்கட்கிழமை முதல் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் உட்பட சில சங்கங்கள் கடந்த புதன்கிழமைமுதல் 3 நாட்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் இவர்களது போராட்டம் முடிவுக்கு வருவதாக இருந்தது. இந் நிலையில் போராட்டத்தை மேலும்தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது
இது தொடர்பாக நடந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால்நாளை முதல் மீண்டும் வழக்கறிஞர்களின் போராட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.