நடிகர் ஆனந்தராஜை முற்றுகையிட்டு பாமக போராட்டம்
ஆரணி:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை விமர்சித்துப் பேசிய நடிகர் ஆனந்தராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி அவரைமுற்றுகையிட்டு பாமகவினர் போராட்டம் நடத்தியதால் ஆரணியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனந்தராஜ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடந்து வருகிறது. இதற்காகஆரணி வந்துள்ள ஆனந்தராஜ், அங்குள்ள ஹோட்டலில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.
ஆரணி ஹோட்டலில் செய்தியாளர்களிடம் ஆனந்தராஜ் பேசுகையில், ராமதாஸ் குறித்து விமர்சித்திருந்தார். இதையறிந்தபாமகவினர் கொந்தளித்து ஆரணி ஹோட்டலுக்கு படையெடுத்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பாமக தொண்டர்கள் ஆவேசமாக குரல் எழுப்பியபடி ஆனந்தராஜை வெளியே வருமாறு கூறினர்.படப்பிடிப்புக்கு செல்வதற்காக வெளியே வந்த ஆனந்தராஜ் பாமக கூட்டத்தைப் பார்த்து அரண்டு போனார்.
ஆனந்தராஜைப் பார்த்ததும் கோபம் அதிகமாக, அவருக்கு எதிராக பாமகவினர் கோஷம் எழுப்பினர். இதையடுத்து போலீஸ்பாதுகாப்புடன் ஆனந்தராஜ் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டார். பின்னர் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அவர்சென்னைக்குக் கிளம்பினார்.












Click it and Unblock the Notifications