25ம் தேதி பொறியியல் கல்வி கவுன்சிலிங்!
சென்னை:
பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாலோசனை (கவுன்சிலிங்) வருகிற 25ம் தேதி தொடங்குகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, மருத்துவம், பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுமதிப்பெண் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதையடுத்து கவுன்சிலிங்தேதியை அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்து விட்டதாகத் தெரிகிறது.
பி.இ, பி.டெக் ஆகியவற்றில் சேர விரும்புகிற மாணவர்கள் வருகிற 13ம் தேதியோ அல்லது அதற்கு முன்போ பிளஸ்டூதேர்வில் தங்களது இம்ப்ரூவ்மென்ட் மதிப்பெண்கள், நுழைவுத் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றை உரிய விண்ணப்பத்தில்பூர்த்தி செய்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும்.
அதேபோல, மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர் வருகிற 12ம் தேதி மாலைக்குள் மேற்கண்டவிவரங்களை மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து முதலில் மருத்துவக் கல்விக்கான கவுன்சிலிங் தொடங்கும். அதன் பின்னர் வருகிற 25ம் தேதி முதல்பொறியியல் கல்விக்கான கவுன்சிலிங் ஆரம்பமாகும்.