கஞ்சா வழக்கு: மதுரை கோர்ட்டில் ஜனனி ஆஜர்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

கஞ்சா வழக்கில் இளம்பெண், ஜனனி மதுரை போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

மதுரையைச் சேர்ந்த இளம் பெண் ஜனனி, அவரது தாயார் ஷெரீஜா, கார் டிரைவர் சதீஷ் ஆகியோரைகருப்பாயூரணி போலீஸார் கடந்த ஆண்டு கைது செய்தனர். 30 கிலோ கஞ்சா, ரூ. 1 கோடி ரொக்கப் பணம் ஆகியவற்றைவைத்திருந்ததாக அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனனி உள்ளிட்டோர்தடை வாங்கினர். பின்னர் உச்சநீதிமன்றம் மூலம் 3 பேரும் ஜாமீனில் விடுதலையாகினர்.

இந் நிலையில் மதுரை போதைப்பொருள் நீதிமன்றத்தில் இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஜனனிமட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். ஷெரீஜா மற்றும் சதீஷ் ஆகியோர் உடல் நலக்குறைவு காரணமாக நீதிமன்றத்திற்குவரவில்லை.

இதையடுத்து வழக்கை வருகிற 25ம் தேதிக்கு நீதிபதி மாணிக்கம் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நீதிமன்றம் வந்திருந்த ஜனனி, கொஞ்சம் சதை போட்டிருந்தார். படு உற்சாகமாக காணப்பட்டார்.அவரைக் காண ஏராளமான பேர் நீதிமன்ற வளாகத்தில் கூடினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+