இலவசப் பாடப் புத்தகம்: அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு உதவி பெறாத தனியார் பள்ளி மாணவர்களுக்கும் தமிழக அரசு பிளஸ்டூ வரை இலவச பாடப் புத்தகங்களை வழங்கவேண்டும் என்று கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டது.
இந் நிலையில் மதுரை வாடிப்பட்டியில் உள்ள சார்லஸ் மேல் நிலைப்பள்ளியின் நிர்வாகி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவழக்கைத் தொடர்ந்தார்.
அதில், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கும் இலவசமாக பாடப் புத்தகங்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி பி.டி.தினகரன், இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறி தமிழக அரசுக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications