For Daily Alerts
Just In
சங்கரராமன்: 25ம் தேதிக்கு வழக்கு தள்ளிவைப்பு
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக ஜெயேந்திரர் உட்பட 24 பேரும் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்றுஆஜரானார்கள். வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் காரணமாக விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
குற்றப் பத்திரிக்கை நகல்கள் கடந்த மார்ச் 31ம் தேதி 24 பேருக்கும் வழங்கப்பட்டது. அதன் பின்னர் செங்கல்பட்டு செஷன்ஸ்நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. கடந்த 16ம் தேதி இங்கு வழக்கு விசாரணைக்கு வந்தது. பின்னர் ஜூலை 12ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி இன்று ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேரும் ஆஜரானார்கள். ஆனால் மாநிலம் முழுவதும்வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்து வருவதால் விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Comments
Story first published: Tuesday, July 12, 2005, 5:30 [IST]