குற்றவாளிகளை விடுவிக்க வாலிபரின் நூதன போராட்டம்

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

சிறையில் 10 ஆண்டுகளைக் கடந்தும் தண்டனையை அனுபவித்து வரும் கைதிகளை விடுவிக்கக் கோரி கும்பகோணத்தில்முன்னாள் குற்றவாளி ஒருவர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கும்பகோணம் கம்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் மீது ஏராளமான திருட்டு வழக்குகள் நிலுவையில்உள்ளன.அடிக்கடி சிறைக்கு சென்று திரும்புவார். சமீபத்தில் தான் சிறையிலிருந்து அவர் விடுதலையாகியிருந்தார்.

இந் நிலையில், இன்று காலை கும்பகோணம் ராணி பூங்கா அருகே உள்ள அரச மரத்தில் விடுவிடுவென ஏறினார் செல்வம்.மரத்தின் உச்சிக்கு சென்று விட்ட அவர் அங்கிருந்து கீழே போய்க் கொண்டிருந்தவர்களை உரத்த குரல் எழுப்பி அழைத்தார்.

அனைவரும் மேலே பார்த்தபோது அபாயகரமான நிலையில் மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்தார் செல்வம். இதுகுறித்துதீயணைப்புப் படையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து மேலே இருந்தநபரிடம் பேசினர்.

அப்போது செல்வம், 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் கைதிகளை உடனடியாகவிடுதலை செய்ய வேண்டும்.

காந்தி, அண்ணா பிறந்த நாட்களின் போது நன்னடத்தை கைதிகளை முன்பு விடுவிப்பார்கள். தற்போது அதுபோலசெய்வதில்லை. அதையும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அவரது கோரிக்கைகள் குறித்து மேலிடத்தில் பேசி நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை அதிகாரிகள் செல்வத்திடம்உறுதியளித்தனர். இதையடுத்து அவர் கீழே இறங்கி வர சம்மதித்தார். பின்னர் தீயணைப்பு வண்டியின் ஏணி மூலம் செல்வத்தைகீழே இறக்கினர்.

பின்னர் அவரை போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். செல்வத்தின் இந்த நூதனப்போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டும் இதேபோல மரத்தில் ஏறி சில கோரிக்கைகளைமுன் வைத்து பரபரப்பூட்டியவர் செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+