பெங்களூர் நீதிமன்றத்தில் தினகரன் திடீர் சரண்: கைதாகாமல் தப்பினார்
பெங்களூர்:
பெங்களூர் தனி நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்ததை தொடர்ந்து அதிமுக எம்பியும் சிசகலாவின் அக்காள்மகனுமாந டி.டி.வி. தினகரன் இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவர் ஜாமீனில்விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கு முன்பும் தினகரன் இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜாராகமலேயே இருந்து வந்தார். தான் ஒருஎம்.பி என்றும் தனக்கு பல வேலைகள் இருப்பதாகவும் கூறிக் கொண்டு நீதிமன்றத்திற்கு வராமல் காலம் கடத்திவந்தார்.
இந் நிலையில் நேற்றும் சொந்த அலுவல் காரணமாக தினகரனால் ஆஜராக முடியவில்லை என அவரதுவழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி பச்சாப்பூரே, தினகரனை கைதுசெய்து வரும் 16ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து தினகரன் இன்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின் அவரை ரூ. 1லட்சம் சொந்தஜாமீன் உத்தரவாதத்தின் பேரில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
தினகரனுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அவர் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதைதொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த இருவரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகமல் ஏதாவது சாக்குபோக்கு கூறிக் கொண்டே நாட்களைக்கடத்திக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்த விசாரணையின் போது இவர்கள் பெங்களூர்நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்று தெரிகிறது.
அதே போல சசிகலாவின் உறவினரான இளவரசியும் நீதிமன்றத்தில் ஆஜராகிவிடுவார் என்று தெரிகிறது.
இந்த வழக்கில் ஆரம்பத்தில் இருந்து ஆஜராகி வரும் ஒரே நபர் சிவாஜி வீட்டு மருமகனும் சசிகலாவின் அக்காள்மகனுமான சுதாகரன் மட்டுமே. கூலிங்கிளாஸ் மற்றும் தனது ஆதரவாளர்கள் புடைசூழ, பெங்களூருக்கு டூர்வருவது மாதிரியான கெட்-அப்பில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிடுகிறார்.












Click it and Unblock the Notifications