சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெ., சசிகலா ஜாமீன் பத்திரங்கள் மாயம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்தஜாமீன் மனு பத்திரங்கள் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா, சசிகலா உட்பட 5 பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவருகிறது. இந் நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும்

ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது ஜாமீன் மனு பத்திரங்களை பெங்களூர் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று சென்னைதனி நீதிமன்றத்திற்கு நீதிபதி பச்சாப்பூரே கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு சென்னை தனி நீதிமன்ற நீதிபதி எழுதிய ஒரு பதில் கடிதத்தில், சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டபொருட்கள் ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றின் மதிப்பு அதிகம் என்பதால் நீங்களே வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று எழுதியிருந்தார்.

அவர் இரண்டாவதாக எழுதிய கடிதத்தில், ஜெயலலிதா, சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் பத்திரங்கள் சென்னைதனி நீதிமன்றத்தில் இல்லை. இவை கடந்த வருடமே பெங்களூருக்கு அனுப்பப்பட்டு விட்டன.

கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் அந்த ஆவணங்களை பெற்றுக் கொண்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த 2 கடிதங்களுக்கும் பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி பச்சாப்பூரே விரைவில் பதில் கடிதம் எழுதுவார் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+