19ம் தேதி எம்பிபிஎஸ் சேர்க்கை கவுன்சிலிங்
சென்னை:
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாலோசனை (கவுன்சிலிங்) வருகிற 19ம் தேதி தொடங்குகிறது.
அதன்படி வருகிற 19ம் தேதி கவுன்சிலிங் தொடங்குகிறது. 24ம் தேதி முடிவடைகிறது. அதற்கு முன்பாக 16ம் தேதி ரேங்க்பட்டியல் வெளியிடப்படுகிறது. 19ம் தேதி தொடங்கும் கவுன்சிலிங்கின் போது சிறப்புப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும்.
20ம் தேதி பொதுப் பிரிவினருக்கும், 21ம் தேதி பிற்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கும், 22ம் தேதி மிகவும் பிற்பட்டோருக்கும்,23ம் தேதி தாழ்த்தப்பட்டார், பழங்குடியினர் மற்றும் 50 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வருவோர் ஆகியோருக்கும், 24ம் தேதி சுயநிதி மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவத்திற்கான கவுன்சிலிங் நடைபெறும்.
எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மொத்தம் 1445 இடங்களும், பி.டி.எஸ். படிப்புக்கு 100 இடங்களும் உள்ளன. வேலூர் அரசுமருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 100 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் எம்.பி.பி.எஸ்.படிப்புக்கான இடங்கள் 1545ஆக உயர்ந்துள்ளது.
பொறியியல் கல்விக்கான கவுன்சிலிங் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.