சங்கர மடத்தில் தீ விபத்து எதிரொலி: வாஸ்துப்படி வாசலில் மாற்றம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வாஸ்துப்படி சங்கர மடநுழைவாயிலை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
வியாழக்கிழமை காலை சமையல் அறையில் ஊழியர்கள் சமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுதிடீரென காஸ் சிலிண்டரிலிருந்து ஏற்பட்ட கசிவின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.
இதையடுத்து உள்ளே வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பதறியடித்து வெளியேறினர்.
தீயணைப்புப் படைக்குத் தகவல் தரப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து பெரியவிபத்தைத் தடுத்தனர்.
ஜெயேந்திரர் வருகிற 17ம் தேதி முதல் சதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்ளவுள்ளார். இந் நிலையில் தீவிபத்துஏற்பட்டதை கெட்ட சகுனமாக சங்கர மட நிர்வாகிகள் கருதுகின்றனர். வாஸ்து கோளாறு ஏதும் ஏற்பட்டிருக்கலாம்என்று கருதும் அவர்கள் வாஸ்து சாஸ்திர நிபுணர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து சங்கர மட நுழைவாயிலை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்துநுழைவாயிலை மாற்றியமைக்கும் வேலைகள் தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications