சங்கர மடத்தில் தீ விபத்து எதிரொலி: வாஸ்துப்படி வாசலில் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வாஸ்துப்படி சங்கர மடநுழைவாயிலை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் பெரியவர் என்றழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின்பிருந்தாவனம் உள்ளது. அதன் பின்புறம் சமையல் அறை உள்ளது. அங்குதான் சங்கர மடத்திற்கு வருபவர்கள்,முக்கியப் பிரமுகர்கள் ஆகியோருக்கு உணவு சமைக்கப்படும்.

20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவது வழக்கம்.

வியாழக்கிழமை காலை சமையல் அறையில் ஊழியர்கள் சமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுதிடீரென காஸ் சிலிண்டரிலிருந்து ஏற்பட்ட கசிவின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.

இதையடுத்து உள்ளே வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பதறியடித்து வெளியேறினர்.

தீயணைப்புப் படைக்குத் தகவல் தரப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து பெரியவிபத்தைத் தடுத்தனர்.

ஜெயேந்திரர் வருகிற 17ம் தேதி முதல் சதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்ளவுள்ளார். இந் நிலையில் தீவிபத்துஏற்பட்டதை கெட்ட சகுனமாக சங்கர மட நிர்வாகிகள் கருதுகின்றனர். வாஸ்து கோளாறு ஏதும் ஏற்பட்டிருக்கலாம்என்று கருதும் அவர்கள் வாஸ்து சாஸ்திர நிபுணர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து சங்கர மட நுழைவாயிலை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்துநுழைவாயிலை மாற்றியமைக்கும் வேலைகள் தொடங்கியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+